Friday, August 19, 2011

மீண்டும் சில கேப்சூல் கவிதைகள்




1.வெயில் அடிக்கிறது
மழை பொழிகிறது
இலை விழுகிறது
அலை எழுகிறது 
நான் இருக்கிறேன்
அல்லது
இருக்கிறேனா?

2.மின்சாரத்தில் உயிர்விட்ட
காக்கையின் உறவினர்கள்
இன்னும் வரவில்லை
காத்திருக்கிறேன்

3.இந்தக் கவிதை ஒருபோதும்
கவிதை என்ற பேரில்
அழைக்கப் படவில்லை

4.இந்த வீடுதான் என்று
அடையாளம் காட்டிய
அழகிய கண் பெண்ணுக்கு
எந்த வீடு?

5.கடிகாரத்தைக் கொன்றுவிட்டேன்
இன்று காலையில்
இனி எனக்கு இறப்பில்லை
ஆனால் கொன்ற நேரம் எது?
என்று அத்தாட்சி கேட்கிறார்கள் 
எப்படி அறிவேன்?
                                      - போகன் 

No comments:

Post a Comment