Friday, August 19, 2011

பிடிவாதப் பூ....





யாருக்காக எனில்
இடுகாட்டுப் புகை மூலையில்
வரிப்பார் யாரும்
இல்லை எனினும்
பிடிவாதமாய்
தினம்
ஒரு பூ
தலை உயர்த்தி
சூரியனுக்கனுப்பும்
பெயரறியா
காட்டுக் குறும் செடிக்கும்
சேர்த்தே
பொன்வெயிலும்
இள மழையும்...

                        - போகன் 

No comments:

Post a Comment