Saturday, July 23, 2011

இடரிடை வாழ்க்கை




மந்தையிலிருந்து
ஆடு தவறிவிட்டது
மாலை விழும்போது
ஆடு
மலையின் தனிமையில் இருந்தது
நேரம் போகப் போக
அதற்கு பசித்தது
கொடுமையான குளிரில் நடுங்கியது

வேகமாக படியும்
இருட்டைக் கண்டு மிரண்டது
புதர்களில் இருந்து கிளம்பிவரும்
வினோத ஒலிகளைக் கேட்டு
அஞ்சியது

அங்குமிங்கும் ஓடியபடி
மேய்ப்பர்களைத் தேடி ஓடியது
பரிதாபமாக கதறியது
பள்ளத்தாக்கின் கீழ்வளைவில்
இரைக்கும் வயிற்றுடன்
நின்றிருந்த ஓநாய்க் கூட்டத்தின்
ஒளிரும் கண்களில்
எரியும் பசியைக் கண்டு திடுக்கிட்டது

சட்டென்று நின்று
ஒருகணம்
ராட்சதத் தட்டு போல் எழும்பும்
பெரிய
மஞ்சள் நிலவை வியந்தது

நன்றி:- http://ezhuththuppizhai.blogspot.com/

No comments:

Post a Comment