Saturday, July 23, 2011

கண்ணதாசன் பாடல் வரிகள்-8

பாடல்: மூடித்திறந்த இமையிரண்டும்
பாடியவர்கள்: டி எம் சௌந்தரராஜன், சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: தாயைக் காத்த தனயன்



மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த காலிரண்டும் நில்நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல்சொல் என்றது
மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
வா வா என்றது
அன்னப் பொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது
அன்னப் பொடி நடை முன்னும் பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ணக் கொடியிடை கண்ணில் விழுந்து மெய்யோ பொய்யோ என்றது
கன்னிப் பருவம் உன்னைக் கண்டு காதல் காதல் என்றது
கன்னிப் பருவம் உன்னைக் கண்டு காதல் காதல் என்றது
காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம் நாணம் என்றது
காதல் என்றதும் வேறோர் இதயம் நாணம் நாணம் என்றது
மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
வா வா என்றது
காட்டுக் குயிலைக் கூட்டிலடைத்துப் பாட்டுப் பாடச் சொன்னது
கூட்டுக்குயிலை நாட்டுக்குயிலாய்க் கூட்டிப்போக வந்தது
காட்டுக் குயிலைக் கூட்டிலடைத்துப் பாட்டுப் பாடச் சொன்னது அது
கூட்டுக்குயிலை நாட்டுக்குயிலாய்க் கூட்டிப்போக வந்தது
வேட்டை உள்ளம் வலை விரித்து வேங்கை வருமென நின்றது
வேட்டை உள்ளம் வலை விரித்து வேங்கை வருமென நின்றது
வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளிக் கலைமான் விழுந்தது
வேங்கைக்காக விரித்த வலையில் வெள்ளிக் கலைமான் விழுந்தது
மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த காலிரண்டும் நில்நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல்சொல் என்றது
மூடித்திறந்த இமையிரண்டும் பார்பார் என்றன
வா வா என்றது

No comments:

Post a Comment