Saturday, July 23, 2011

கண்ணதாசன் பாடல் வரிகள்-5

பாடல்: நினைக்கத் தெரிந்த மனமே
பாடியவர்: பி சுசீலா
இயற்றியவர்: கண்ணதாசன்
திரைப்படம்: ஆனந்த ஜோதி


நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா?
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா?
அன்பே மறையத் தெரியாதா?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?
கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா?
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா?
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா?
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?

No comments:

Post a Comment