Wednesday, July 20, 2011

கண்ணதாசன் பாடல் வரிகள்-1

பாடியவர்: பி. சுசீலா

இயற்றியவர்: கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

திரைப்படம்: பாகப்பிரிவினை

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே

மாற்றம் காண்பதுண்டோ?

மாற்றம் காண்பதுண்டோ?

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

கால்களில்லாமல் வெண்மதி வானில்

தவழ்ந்து வரவில்லையா?

கால்களில்லாமல் வெண்மதி வானில்

தவழ்ந்து வரவில்லையா? - இரு

கைகளில்லாமல் மலர்களை அணைத்து

காதல் தரவில்லையா?

காதல் தரவில்லையா?

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து

காதல் உறவாடுவேன்

காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து

காதல் உறவாடுவேன் உயர்

மானம் பெரிதென்று வாழும் குலமாதர்

வாழ்வின் சுவை கூறுவேன்

வாழ்வின் சுவை கூறுவேன்

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

No comments:

Post a Comment